முராத்நகர்: உத்தர பிரதேச மாநிலம், முராத் நகரில், மயானத்தின் கூரை இடிந்து விழுந்து, 21 பேர், உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காஜியாபாத் மாவட்டம், முராத்நகர் பகுதியில், நேற்று முன்தினம் ஒருவர் இறந்தார். அவரது இறுதிச் சடங்கு, நேற்று நடந்தது. மூராத் நகர் மயானத்தில் நடந்த இறுதிச் சடங்கில், 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர், அப்போது, மயான கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி, 21 பேர் இறந்தனர்; 38 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா, 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE