வெள்ளகோவில்:வெள்ளகோவில் குமாரவலசு சாலையில் உள்ள, ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் நிறைவுற்று, ஐந்தாம் ஆண்டு கொடியேற்றம் கடந்த 30ம் தேதி துவங்கியது. ஒரு வாரம் தொடர்ந்து காலை அபிஷேக ஆராதனை, மாலை உற்சவர் திருமேனி அபிஷேகம், யாகசாலை பூஜை, அஷ்டபலி பூஜை, தீபாராதனை நடந்தது, இரவு உற்சவர் திருமேனி திருவீதி உலா நடந்தது.இன்று காலை மகா கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. 10:00 மணி அளவில் ஸ்ரீ துர்கா மகாலட்சுமி சுதர்சன ஹோமம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை துவங்குகிறது.இரவு 7:00 மணிக்கு மகாதீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. நாளை காலை 10:00 மணி அளவில் உற்சவமூர்த்திக்கு கொடுமுடி காவிரி நதியில் ஆராட்டு, சுவாமிக்கு அஷ்ட திரவிய அபிஷேகம், மகா தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கம் மற்றும் சேவா சங்க அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE