பந்தலுார் : வயநாடு வனப்பகுதியில், இறந்த குட்டி யானை அருகே, யானை கூட்டம் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக - கேரள எல்லையில் உள்ள, வயநாடு மாவட்டம் முத்தங்கா சரணாலயம் குறிச்சியாடு வனப்பகுதியில், ஒரு யானைக்குட்டி இறந்து கிடந்தது. அதனருகே தாய் யானை உள்ளிட்ட நான்கு யானைகள் சோகத்துடன் நிற்கின்றன. பட்டாசு வெடித்தும் யானைகள் நகராமல் அதே இடத்தில் முகாமிட்டுள்ளதால், குட்டி யானை உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE