வால்பாறை:வால்பாறை நகரில் ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும், என, சி.ஐ.டி.யு., கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்ட தோட்ட தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்க (சி.ஐ.டி.யு.,) பொதுசெயலாளர் பரமசிவம், வால்பாறை தாலுகா அலுவலகத்தில், மனு கொடுத்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரக் கடைகள் அதிக அளவில் உள்ளன. மேலும், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களும் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.வால்பாறை தபால் அலுவலகம் முதல், புது பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும். ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், ஆட்டோ, வேன் நிறுத்த இடம் இல்லாத நிலை நீடித்து வருகிறது.எனவே, வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE