ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், இளநீரின் பண்ணை விற்பனை விலையை, 17 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் சீசன் காரணமாக, இளநீர் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. மாநிலம் முழுவதிலும் இளநீர் தேவை குறையவில்லை. தற்போது, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கும் செல்கிறது.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தேவை, வரத்தில் பெரும் மாற்றம் இல்லாததால், இளநீர் விலையில் மாற்றம் இல்லை. இன்று, 4ம் தேதி முதல் ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, 17 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடைக்கு வழங்கினால், ஒரு டன் இளநீர், 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். பொங்கலுக்குப்பின், இளநீர் தேவை அதிகரித்து, தொடர்ந்து விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE