பாதர்வா:பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சிறப்பாக வீடு கட்டியதற்கான விருது, முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட முதியவரான, அப்துல் லத்தீப் கனாய், 65, என்பவருக்கு, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சிறந்த கட்டுமானத்துக்கான விருதினை, பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
பிரச்னை
பொருளாதார நிலையில் பின்தங்கிய ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்காக, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சொந்த வீடு கட்டிக்கொள்ள நிதி வழங்கும் திட்டம், 2015ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நிதி பெற்று கட்டி முடிக்கப்படும் வீடுகளில், சிறப்பாக கட்டப் பட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து, அதன் உரிமையாளர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகின்றது.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், நாடு முழுதும் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில், 88 வீடுகள் விருதுக்காக தேர்வாகின. அதில், மூன்று வீடுகள், ஜம்மு -- காஷ்மீரின், சம்பா, ராம்கர் மற்றும் பாதர்வா ஆகிய இடங்களில் உள்ளன.இதில், பாதர்வா என்ற இடத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர் பெயர் அப்துல் லத்தீப் கனாய், 65. சிறிய துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட, முதுகுதண்டுவட பிரச்னையால், படுக்கையில் இருந்து எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த, 15 ஆண்டுகளாக படுக்கையில் உள்ள இவர், சிகிச்சைக்காக, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றார். ஒரே ஒரு அறை உடைய வீட்டில், மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். 'வீடியோ கான்பரன்ஸ்' இந்நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 1.66 லட்சம் ரூபாய் நிதி பெற்று, சிறிய வீட்டை கட்டி முடித்தார். சிறப்பான வீடு கட்டியதற்காக, இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, விருதை, அப்துல் லத்தீப்புக்கு வழங்கினர்.விருது பெற்ற அப்துல் லத்தீப், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE