பொள்ளாச்சி அருகே சாத்துப்பாறையை சேர்ந்தவர் ராஜன், 62. இவர், பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு அய்யம்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த பைக் மோதியது. அதில், ராஜன் பலத்த காயமடைந்தார்.எதிரே பைக்கில் வந்த தப்பட்டைகிழவன்புதுாரை சேர்ந்த அகத்தீஸ்வரன், 45, அகத்துார்சாமி, 45 ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். ராஜன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். அகத்துார்சாமி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.மது அருந்தியவர் கைதுபொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம் பகுதியில், தாலுகா போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டு இருந்த, டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ராமசாமியை, 38, கைது செய்தனர்.லாட்டரி விற்றவர் கைதுபொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சபரீஸ்வரன், 47, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, கேரள மாநில 11 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE