உடுமலை:ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 'ஆன்லைனில்' இன்று துவங்குகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. நடப்பாண்டில், கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பள்ளிகளில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படவில்லை.நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி, 'ஆன்லைனில்' துவக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், இன்று முதல் 'ஆன்லைனில்' துவங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் பதிவு செய்த மாணவர்களுக்கு, அடையாள எண் மற்றும் ரகசிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.இதனை பயன்படுத்தி, தவறாமல், இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க, தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE