கோவில்பாளையம்:நடந்து சென்ற தொழிலாளி பைக் மோதி இறந்தார்.காரமடை, சீலியூரை சேர்ந்தவர் மாரிமுத்து, 45. இவர் கரட்டுமேடு பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலை 9:00 மணிக்கு, கரட்டுமேடு சாலையை கடக்கும்போது, அன்னுாரில் இருந்து கோவை நோக்கி சென்ற பைக் மோதியது. பலத்த காயம் அடைந்து மாரிமுத்து, அதே இடத்தில் இறந்தார்.பைக் ஓட்டி வந்த, ரத்தினபுரி, ஆறுமுகம் மகன் பரத்குமாருக்கு, 20, முகம் மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE