சூலுார்:பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு எழுந்துள்ளது.சூலுார் அடுத்த அரசூர் ஊராட்சியில் கிருஷ்ணா ரெசிடன்சி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.உலக பசுமை புரட்சி அமைப்பின் சார்பில், கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு விபரம்:பூங்கா, விளையாடுமிடம் மற்றும் திறந்தவெளி பாதுகாத்தல் வரைமுறை சட்டப்படி, அந்த இடங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த வழிவகையில்லை. இதுகுறித்து சமீபத்தில் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி, அரசூரில் பூங்கா இடத்தில் குடிநீர் தொட்டி கட்டப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE