மேட்டுப்பாளையம்:'தை மாதம் பிறந்து, சுப காரியங்கள் நடக்கும்போது, வாழைத்தார் விலை உயரும் வாய்ப்பு உள்ளது' என வியாபாரிகள் தெரிவித்தனர்.மேட்டுப்பாளையம், வாழைத்தார் ஏல மையத்துக்கு, வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சில மாதங்களாகவே, வாழைத்தார் விலையில் ஏற்றம் இல்லை. இருந்த விலையும், வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஏல மைய நிர்வாகிகள் கூறியதாவது:கொரோனா பிரச்னையால், கேரள வியாபாரிகள் வருவதில்லை. விலையும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. நேற்று ஏலத்துக்கு, 7,000 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன.ஒரு கிலோ நேந்திரன் குறைந்தபட்ச விலை, 12, அதிகபட்ச விலை, 16, கதளி குறைந்தபட்சம், 15, அதிகபட்சம், 30 ரூபாய்க்குவிற்பனையானது.பூவன் தார் குறைந்தபட்சம், 100லிருந்து, அதிகபட்சம், 300 ரூபாய்க்கும், செவ்வாழை, 100லிருந்து, 700க்கும், தேன்வாழை, 150லிருந்து, 500 ரூபாய்க்கும், ரஸ்தாளி, 75 லிருந்து, 375க்கும், ரோபஸ்டா, 30லிருந்து, 200க்கும், மொந்தன் குறைந்தபட்சம், 50லிருந்து, அதிகபட்சம், 200 ரூபாய்க்கும் விற்பனையானது. தை மாதம் சுப காரியங்கள் நடக்கும்போது, வாழைத்தார் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE