திருவாடானை : மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில்தொண்டி பெருமானேந்தல் அருகே காவிரிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது.
இதனால் தொண்டி, புதுக்குடி, அனிஷ்நகர்,நம்புதாளை, மகாசக்திபுரம் போன்றபல்வேறு பகுதிகளுக்கு போதுமான நீர் செல்லாததால் அப்பகுதி மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.இச் சாலையில் சில நாட்களுக்குமுன்பு தினையத்துார், கடம்பாகுடி போன்ற இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது.காடாங்குடி முத்து கூறியதாவது- குழாயில் உடைப்பு ஏற்பட்டால் 3 அல்லது 4 நாட்களுக்குபிறகே சரி செய்யப்படுகிறது. அதுவரை போதுமான தண்ணீர் கிடைக்காமல் சிரமமாக உள்ளது. தரமான குழாய்களை பதித்து உடனுக்குடன் தண்ணீர் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE