பரமக்குடியில் வைகை ஆற்றில் கருவேல மரங்கள்; நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி

Added : ஜன 04, 2021 | |
Advertisement
பரமக்குடி : பரமக்குடியில் ஒரே நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றில கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மக்களின் கோரிக்கையால் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.பரமக்குடியில் நேற்று முன்தினம் சமுதாய தலைவர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது பரமக்குடி வைகை

பரமக்குடி : பரமக்குடியில் ஒரே நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றில கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மக்களின் கோரிக்கையால் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.



பரமக்குடியில் நேற்று முன்தினம் சமுதாய தலைவர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது பரமக்குடி வைகை ஆற்றில் கருவேல மரங்கள் அடர்ந்து கழிவுநீர் கலப்பதால் குடிநீர் ஆதாரம்பாதிப்பதாக தெரிவித்தனர்.காட்டுப்பரமக்குடி பகுதி தொடங்கி, ஆற்றுப்பாலம், பெருமாள் கோயில், தரைப்பாலம், காக்கா தோப்பு வரை பரமக்குடி நகராட்சி எல்லை அமைந்துள்ளது. இப்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித் துறையினரால் ஆறு சீரமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த நாட்களில் மீண்டும் கருவேல மரங்கள் வளர்ந்தன.நேற்று முன்தினம் பரமக்குடிக்கு வந்திருந்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் அதிகாரிகள் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X