ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வட இந்திய வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெட்ஷீட், கம்பளி வியாபாரி ஒருவர் நேற்று மாலை 6:00 மணிக்கு ராமநாதபுரம் மஞ்சனமாரியம்மன் கோயில் காட்டுப்பகுதி வழியாக தலைச்சுமையாக பெட்ஷீட் வியாபாரம் செய்ய சென்றுள்ளார். அங்கு மது அருந்தி கொண்டிருந்த 6 பேர் அவரை மடக்கி தாக்கினர். பையில் வைத்திருந்த விற்பனை பணம் ரூ.4000 மற்றும் 7 போர்வைகளை பறித்து தப்பினர்.கேணிக்கரை போலீசார் தப்பியோடிய ஓம்சக்தி நகரை சேர்ந்த மார்க் மைக்கேல் சாம்ராஜ் 24. ஒயிட் மணி 23, மற்றும் ஒருவரை கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE