அன்னுார்:அன்னுாரில் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம், அன்னுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு, இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. அதே ஊரில் வசிப்பவர் சம்பத், 53; ஹாலோபிளாக் தொழிலாளி.கடந்த 2ம் தேதி, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு, சம்பத் பாலியல் தொல்லை செய்துள்ளார். குழந்தையின் தாயார் கொடுத்த புகாரில், அன்னுார் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, சம்பத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE