விருதுநகர் : மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு 8,067 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று 28 மையங்களில் நடந்த தேர்வில் 4,108 பேர் பங்கேற்றனர். 3,959 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
வினாக்கள் மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். இப்பணியில் 5 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், துணை கலெக்டர் நிலையில் 4 பறக்கும் படையினர் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களை கலெக்டர் கண்ணன் பார்வையிட்டார். சப் கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் முத்துலெட்சுமி உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE