கூடலுார்:''கிராம சபை கூட்டங்களை அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை உடனே தடுக்க வேண்டும்,'' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.நீலகிரி மாவட்டம், கூடலுாரில், அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம், கூறியதாவது:வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். கூடலுார் செக் ஷன்-17 நிலப்பிரச்னை மற்றும் மனித - வன விலங்கு மோதலுக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.கேரள மாநிலம் கோழிக்கோட்டில், ஒரு அமைப்பினர், 'தனி மாநிலம் வேண்டும். அதில், நீலகிரி, கோவையின் சில பகுதிகளை, இணைக்க வேண்டும்' என, கோரியுள்ளனர். அதை அரசு முறியடிக்க வேண்டும்.கோவையில், தி.மு.க, சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்தில், கேள்வி கேட்ட பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பாக, போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியினர் கிராமசபை கூட்டம் நடத்தி, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை உடனே தடுக்க வேண்டும்.இவ்வாறு, அர்ஜுன் சம்பத் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE