ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குன்னத்துாரைசேர்ந்தவர் சிலம்புசெல்வன் 45, புழுதிபட்டியை சேர்ந்த டிரைவர் சண்முகம் 34, நத்தம் எட்டையம்பட்டி யோகநாதன் 33, துவரங்குறிச்சி குன்னுத்துார் சரவண சுந்தரபாண்டியன் 40, ஆகியோர் புதிய காரில் குற்றாலம் சென்று விட்டு திரும்பினர்.
நேற்று மாலை 5:45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஆர்.டி.ஓ., அலுவலகம் ரோட்டில் வந்தபோது எதிரே வந்த டாரஸ் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிலம்பு செல்வன் பலியனார். காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிலம்பு செல்வன் மனைவி சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவராக உள்ளார். கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE