தேனி : தேனியில் நேற்று நடந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் 2090 தேர்வர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை கலெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள் என 66 காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்நிலை எழுத்த தேர்வு நேற்று நடத்தியது. தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் மேல்நிலைப்பள்ளி 16 அறைகளில் தேர்வு நடந்தது. இத் தேர்விற்கு 4,406 பேருக்கு ஹால் டிக்கெட் பெற்றனர். நேற்று நடந்த தேர்வில் 2,316 பேர் தேர்வு எழுதினர். 2090 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE