தேனி : தேனி அல்லிநகரம் கோட்டைக்களம் தெரு லதா 45, இவர் தனது வீட்டின் பத்திரங்களை பழனிச்செட்டிபட்டி மணிகண்டன் 51 என்பவருக்கு பவர் பத்திரம் பதிவு செய்து கொடுத்து ரூ.25 லட்சம் பெற்றார். பின், வீட்டின் ஒரிஜினல் பத்திரங்கள் காணவில்லை' என போலீசில் பொய் புகார் செய்தார். 2020 பிப்.,20ல் உசிலம்பட்டி ஆரியப்பட்டியை சேர்ந்த பவுன்சாமிக்கு தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அதை கிரையம் செய்தார். மணிகண்டன் புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வணிகவரித்துறை இளநிலை உதவியாளரான லதா 45, பவுன்சாமி 35, மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE