கூடலுார் : பென்னிகுவிக் பிறந்த நாள் விழா ஜன. 15 ல் கொண்டாடுவதற்கு முன்பு லோயர்கேம்ப் மணிமண்டபம் சீரமைப்பு பணி முடித்து திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணிமண்டபம் கட்டி 2013ல் திறப்பு விழா காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால் மார்ச்சில் மணிமண்டபம் மூடப்பட்டது. சமீபத்தில் பல சுற்றுலா தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட நிலையில் மணிமண்டபம் திறக்க நடவடிக்கை இல்லை. சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜன. 15 ல் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்படும். இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடித்து விழாவிற்கு முன் திறக்க வேண்டும் என விவசாயிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE