கடமலைக்குண்டு : மேகமலை வனப்பகுதிக்குட்பட்ட அரசரடி, பொம்முராஜபுரம், கோம்பைத்தொழு, அதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி இல்லை. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அருவியில் குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE