பழநி : பழநி வரும் பக்தர்கள் மூன்றாண்டுகளுக்குப் பின் நிரம்பிய இடும்பன் குளம், சண்முகநதியில் குளித்து மகிழ்கின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் நீராடி அதன் பின் பழநி மலைக்கோயிலுக்கு செல்வர். இடும்பன் கோயிலிலும், சண்முக நதியிலும் தீர்த்தம், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துவது பக்தர்களின் வாடிக்கை.
இந்தாண்டு பழநியில் நல்ல மழை பெய்ததால் அணைகள் நிரம்பி சண்முக நதியில் தண்ணீர் வருகிறது. வரதமாநதி தண்ணீரால் இடும்பன் குளம் நிரம்பி உள்ளதால் பக்தர்கள் குளித்து, மலைக்கோயிலுக்கு செல்கின்றனர். பக்தர்கள் நீர்நிலையில் குளிப்பதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக மீட்பு, மருத்துவக் குழுவினரை தயாராக வைத்திருக்க வேண்டும். எச்சரிக்கை அறிவிப்புகளை அடிக்கடி ஒலிபெருக்கியில் தெரிவிக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE