திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கடும் பனிப்பொழிவால் எலுமிச்சை விலை சரிந்து கிலோ ரூ.25 க்கு விற்றது.திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், நத்தம், சிறுமலையில் 800 எக்டேரில் எலுமிச்சை சாகுபடியாகிறது.
திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் ஒரு டன் விற்பனைக்கு வரும். வரத்து குறைவு, விசேஷ நாட்களை முன்னிட்டு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.80க்கு விற்றது.தற்போது திண்டுக்கல்லில் சீசனால் வரத்து அதிகரித்துள்ளது. அதே சமயம் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மக்கள் எலுமிச்சை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் எலுமிச்சைக்கு கிராக்கி குறைந்துள்ளது.கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40க்கு விற்ற எலுமிச்சை, நேற்று முன்தினம் ரூ.30 க்கு விற்றது. நேற்று மேலும் விலை சரிந்து கிலோ ரூ.25 க்கு விற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE