பெண்ணாடம், : பெண்ணாடம் அறிவு திருக்கோவிலில் உலக அமைதி வேள்வி, நிலை உயர்வு பாராட்டு விழா நடந்தது.
அறக்கட்டளைத் தலைவர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். மண்டல துணைத் தலைவர் பேராசிரியர் திருநாவுக் கரசு, அறக்கட்டளை பேராசிரியர் அரங்கநாதன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராவணன் வரவேற்றார். அனைத்து நிலை ஞான ஆசிரியர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர்கள்பங்கேற்றனர்.விழாவில், குடும்பம், சமூகம், உலக அமைதி ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உலக அமைதி வேண்டி, வேதாத்திரி மகரிஷியின் 108 தன ஆகர்ஷ்ண சங்கல்பம் உச்சரிக்கப்பட்டு, வேள்வி நடந்தது. பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE