புதுச்சேரி : தொழிலதிபர் சுரேஷ் தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தார்.
புதுச்சேரி ஏ.எப்.டி., திடலில் பா.ஜ., சார்பில், 'காங்கிரஸ் இல்லா புதுச்சேரி; காண்போம் இனி நல்லாட்சி' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.இப்பொதுக்கூட்டத்தில், தொழிலதிபர் சுரேஷ் தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னிலையில், மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு ஆகியோர் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்.நிகழ்ச்சியில் பொது செயலர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், மாநில செயலர் ரத்தினவேலு, விவசாய அணி பொருளாளர் ஜெய்ரெட்டி, நிர்வாகிகள் ராஜபிரகாஷ், சிவசங்கரன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE