புதுச்சேரி : தனியார் கம்பெனி சூப்பர்வைசர் ரத்த வாந்தி எடுத்து இறந்தார்.
பாக்கமுடையான்பேட், புது வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்,38; இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். வேல்முருகன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று காலை வீட்டில், ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடன், அவர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE