நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா பட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல் மணிகள் முற்றி கடந்த சில நாட்களாக நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விளைந்த நெற் கதிர்கள் பல வயல்களில் அடியோடு சாய்ந்து கிடப்பதால், இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் சேதமடைந்தது.
தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், எஞ்சிய பயிர்களும் மழைக்கு சாய்ந்து கிடக்கின்றன. அவற்றை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE