புதுச்சேரி : புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில், விரைவு பஸ்கள் மட்டும் லாபத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், 55 விரைவு பஸ் வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்தது.இந்நிலையில் மாநிலத்திற்குள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பி.ஆர்.டி.சி., இயக்கம் இல்லாத வழித்தடங்களை குத்தகை அடிப்படையில் தனியாருக்கு அளிப்பது தொடர்பாக போக்குவரத்து துறை கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. இது தொடர்பாக மேலும் சில கூடுதல் விபரங்களை கேட்டு, கவர்னர் கோப்பினை மீண்டும் போக்குவரத்து துறைக்கு அனுப்பி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE