புதுச்சேரி : எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாநில அளவில், கல்லுாரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி கடந்த நவ. 6ம் தேதி நடத்தப்பட்டது. இப்போட்டியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சட்டசபை வளாகத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ. 4000, சான்றிதழும், அடுத்து 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 2000, சான்றிதழ்களை முதல்வர் நாராயணசாமி வழங்கி பாராட்டினார்.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குநர் சேதுராமன், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE