புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதி காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, காங்., கட்சி ஒவ்வொரு தொகுதியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
அதன்படி நெல்லித்தோப்பு காங். நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஜான்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட, வட்டார மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொகுதி நிலவரம், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE