குறிஞ்சிப்பாடி : ஆடு திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று அதிகாலை, டி.பாளையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கடலுார் பிரதான சாலையில் நபர் ஒருவர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆடுகளை ஓட்டிச் சென்றார்.போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணையில் அவர், சேடப்பாளையம், நாகம்மாள் நகரை சேர்ந்த பாலன் மகன் அய்யனார், 40, என்றும், திம்மராவுத்தன்குப்பத்தை சேர்ந்த, ராஜேஷ்குமார், 40, என்பவருக்கு சொந்தமான, 4 ஆடுகளை திருடி, ஓட்டி வந்ததும் தெரிந்தது.ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிந்து, அய்யனாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE