புதுச்சேரி, : புதுச்சேரியில் புதிதாக 50பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்று 3,039 பேருக்கு பரிசோதனை செய்ததில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநி லத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 38,224 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 184 பேர், வீடுகளில் 174 பேர் என மொத்தம் 358 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 633 ஆக நீடிக்கின்றது.நேற்று 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37,233 ஆக அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE