புதுச்சேரி : மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மூதாட்டி மாயமானார்.
மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், வி.பி.சிங் நகர், காந்தி வீதியைச் சேர்ந்தவர் மணி மனைவி சுந்தரி, 75; கடந்த 20ம் தேதி, சோலை நகரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகள் லட்சுமி அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மூதாட்டியை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE