பாகூர், : சார்காசிமேடு சுடுகாட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள தகன மேடையை இடித்து அப்புறப்படுத்தி, புதியதாக அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட சார்காசிமேடு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்குள்ள சுடுகாட்டில், 20 ஆண்டுகளுக்கு முன்பு தகன மேடை கட்டப்பட்டது.தற்போது வரை, பயன்பாட்டில் இருந்து வரும் தகன மேடையை தாங்கி நிற்கும் பில்லர்களில், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து, விரிசல்கள் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகின்றன.அதே போல், மேற்புறத்தில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பெரிய அளவில் விரிசல் இருக்கிறது. வலுவிழந்த நிலையில் உள்ள தகன மேடையால் எந்நேரமும் விபத்து அபாயம் உள்ளது. இதனால், தகனமேடை அருகில் சென்று இறுதி சடங்கில் பங்கேற்க பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள தகன மேடையை புதுப்பித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE