நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வழங்கப்பட்ட அமரர் ஊர்தி வாகனம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஏதேனும் இறப்பு நேரிட்டால், இறுதி சடங்கு செய்வதற்கு அமரர் ஊர்தி வாகனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டது.இதன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்ட அமரர் ஊர்தி வாகனம் சேதமடைந்துள்ளதால் இறுதி சடங்கு செய்வதில் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால் பல ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து தனியார் அமரர் ஊர்தி வாகனத்தினை பெற்று பொதுமக்கள் இறுதி சடங்கு செய்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்துள்ள அமரர் ஊர்தி வாகனத்தை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE