புதுச்சேரி : உழவர்கரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.
இந்திய கம்யூ., கட்சியின் உழவர்கரை தொகுதிக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு நடந்தது. உழவர்கரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டிற்கு தொகுதி செயலர் அன்பழகன் தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாராகலை நாதன் மாநாட்டு துவக்கவுரையாற்றினர்.மாநில செயலாளர் சலீம், தேசியக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, துணை செயலாளர் அபிேஷகம், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கீதநாதன், சேதுசெல்வம் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், சுதானா நகர் லெம்பார்ட் சரவணன் நகர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாரம்பரிய மருத்துவ பிரிவை துவக்க வேண்டும்.உழவர்கரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE