திருக்கோவிலுார் : வீரப்பாண்டியில் சாராய வழக்கில் பல நாட்களாக தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வீரப்பாண்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், தங்கவேல் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வீரபாண்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கருப்பு மணிகண்டன், 40; மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்துவந்தார்.
நேற்று சப் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், தங்கவேல் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கருப்பு மணிகண்டன் பதுங்கி இருக்கும் இடத்திற்கு சென்று போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE