விழுப்புரம் : பெரியதச்சூர் அருகே கொலை செய்ய முயன்றதாக கணவர் மீது மனைவி புகார் செய்துள்ளார்.
பெரியதச்சூர் அருகே வெங்கந்துார் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன்,43; லாரி டிரைவர். இவரது மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி, 16 ஆண்டுகளாகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர்.கடந்த சில தினங்களாக, குடும்ப பிரச்னை காரணமாக, கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீனுவாசன் நேற்று வீட்டில் துாங்கி கொண்டிருந்த பொன்னியம்மாளின் கழுத்தில் கிழித்துள்ளார்.புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் சீனுவாசன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE