சின்னசேலம் : சின்னசேலம் அருகே காணாமல் போன மகளை மீட்டு தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் சின்னதம்பி,47; இவருடைய 15 வயது மகள் சின்னசேலத்திலுள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE