சென்னை: பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பு: இன்று, தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை; தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.நாளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.

அதேபோல, வரும், 6, 7ம் தேதிகளில், மாநிலத்தில் பரவலாக சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில், லேசான மழை பெய்யும். வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 29 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE