கோபி: இரு நாட்களுக்கு பின், கொடிவேரி தடுப்பணை, நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வால், 274 நாட்களுக்கு பின், கடந்த டிச., முதல், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆங்கில புத்தாண்டுக்கு பயணிகள் அதிகம் குவிந்தால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், டிச.,31ம் தேதி மாலை, 5:00 மணி முதல், ஜன.,2 வரை, தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. நேற்று மீண்டும், தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், காலை முதல், வானம் மேகமூட்டமாக இருந்ததால், குறைவான பயணிகளே வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE