கோபி: தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் வருகையால், கோபியில் ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், நாளை மறுதினம், 7 தேதிகளில், முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 6ல், பவானியில், காலை 9:00 மணிக்கும், அந்தியூரில், மதியம், 12:00 மணிக்கு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். சத்தி, புன்செய்புளியம்பட்டி, நம்பியூர் ஆகிய இடங்களில் நிகழ்ச்சி முடித்து, இரவு, 9:00 மணிக்கு கோபி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக, கோபி-சத்தி சாலையில், ராம் நகர் பிரிவு எதிரே, கச்சேரிமேட்டில் ஏற்பாடு நடக்கிறது. முதல்வர் நின்று பேச வசதியாக, சென்டர் மீடியன் கற்களை அகற்றி, இடவசதி செய்யப்படுகிறது. இதனால் கோபி சிக்னல் முதல், கச்சேரிமேடு வரை, சென்டர் மீடியன் கற்களில் பெயின்ட் அடிக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிற ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE