ஏற்காடு: ஏற்காட்டில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க ஆலோசணை கூட்டம், நேற்று நடந்தது. ஏற்காடு ஊராட்சி செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். அதில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்பரேட்டருக்கு, சட்டசபையில் அறிவித்த ஊதிய உயர்வுக்கு அரசாணை வெளியிடுதல்; கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு, கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கத்துக்கு, ஏற்காடு ஒன்றிய தலைவராக சிவக்குமார், செயலராக மணிவண்ணன், பொருளாளராக தங்கராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி செயலர்கள் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE