தர்மபுரி: ராமர்கூடலில், சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பண்டஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ராமர்கூடலில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில், எட்டு ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், வளாகத்தின் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால், தண்ணீர் வருவதில்லை. இதனால், மகளிர், குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திறந்த வெளியில், இயற்கை உபாதை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயன்பாடின்றி உள்ள, சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE