பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி பஞ்.,ல், மக்களின் அடிப்படை தேவை பணிகளை மேற்கொள்ள, பஞ்., நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தப்பாடி பஞ்.,ல், ஒகேனக்கல், ஊட்டமலை, மடம், கூத்தப்பாடி, பூதிப்பட்டி, கே.அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள, பல மினி ?குடிநீர் டேங்குகள் சேதமாகி உள்ளன. தெரு நடுவே அமைத்த, கழிவுநீர் கால்வாயின் மேல் சிலாப் உடைந்து, அதில், அப்பகுதி குழந்தைகள், முதியோர் என பலரும் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள், பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நிதி இல்லை எனக்கூறி, எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், மடம் கிராமத்தில் மட்டும் பல பணிகள் நடந்து வருவதாக, கூத்தப்பாடி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கூத்தப்பாடி கிராமத்தில், பழுதடைந்த கழிவுநீர் கால்வாய் சிலாப்புகளை சீரமைத்தும், கூத்தப்பாடி பஞ்.,ல் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அடிப்படை பணிகளை பாரபட்சமின்றி நிறைவேற்ற வேண்டுமென்றும், மாவட்ட நிர்வாகத்துக்கு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE