நாமக்கல்: வீரபாண்டிய கட்டபொம்மனின், 262வது பிறந்த நாள் விழா, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட நாயுடு இளைஞரணி தலைவர் சக்தி வெங்கடேஷ் தலைமை வகித்து, கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர தலைவர் ரஞ்சித், மாவட்ட துணைத் தலைவர் அசோக், இளைஞரணி செயலாளர்கள் லோகு, இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர், மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
* குமாரபாளையம், விடியல் ஆரம்பம் சார்பில், வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்விழா, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இருவரின் திருவுருவ படத்திற்கு, மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவிதை, பேச்சு, கட்டுரை, மாறுவேட போட்டிகள் நடந்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் தீனா, ஞானசேகர், சங்கர், தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE