குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, பல்லக்காபாளையம் முனியப்பன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தீர்த்தக்குட ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் திருவிழா நடந்தது. சந்தைப்பேட்டை வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அங்கு, சிறுவர், சிறுமியருக்கு ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, மாடு, வீடு, சிறுவன், சிறுமி உள்ளிட்ட மண்ணால் செய்யப்பட்ட பல உருவங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதிக கரும்பு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE