நாமக்கல்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழுக்கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முகமது அலி கோரிக்கை குறித்து பேசினார். கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு, மூன்று மாதங்கள் வரை, ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிற பாலுக்கு பாக்கி வைத்துள்ளது. பொங்கலையொட்டி, அனைத்து பாக்கிகளையும் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு, நடப்பு ஆண்டுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை, போனஸ் உடனடியாக வழங்க வேண்டும். கால்நடை தீவனங்கள் வழங்குவதில் உள்ள தட்டுப்பாட்டை போக்கி, தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு வந்துள்ள மடிநோய், அம்மை நோய்க்கு சிறப்பு முகாம் நடத்தி, கறவை மாடுகளை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE