கரூர்: கரூர் மாவட்டத்தில், 11 மையங்களில் குரூப்-1 பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது. அதில், 1,589 பேர் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, துணை ஆட்சியர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, 66 காலி பணியிடங்களுக்கு, 2.57 லட்சம் பேர் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். கரூர் மாவட்டத்தில், 3,139 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதற்காக, 11 மையங்கள் தேர்வு எழுத அமைக்கப்பட்டிருந்தது. நேற்று எழுத்து தேர்வு நடந்தது. முன்னதாக, எழுத்து தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்களுக்கு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். கரூர் அருகே, தான்தோன்றிமலையில் உள்ள, அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை, கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார். கரூர் மாவட்டத்தில், விண்ணப்பித்து இருந்த, 3,139 பேரில், 1,589 பேர் தேர்வு எழுதினர். 1,550 பேர் ஆப்சென்ட் ஆயினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE